Sample Text

August 20, 2014

அரிது அரிது

அறியது கேட்கின் வரிவடிவேலோய் அறிது அறிது மானிடராதல் அறிது...
மானிடராய் பிறந்தும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அறிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும்தான் செய்தல் அறிது
தானமும் தவமும்தான் செய்தலாயினும்
வானவர் நாடு வழி திறந்திடுமே.
கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது;ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது; அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர்கையில் இன்புற உண்பது தானே.
பெரியது கேட்கின் நெறிதமிழ வேலோய்
் பெரிது பெரிதுபுவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமான் உந்தியில் வந்தோன
் கரியமானோ அலைகடற் துயின்றோன
் அலைகடலோ குறுமுனியின் கையில் அடக்கம
் குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியின் திருமண் புவியோ அரவினிற்கொரு
தலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம
் உமையோ இறைவன் பாகத்தொடுக்கம
் இறைவனோ தொண்டருளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!
இனியது கேட்கின் தனிநெடுவேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுளாரைக் கனவினும் நனவினும் காண்பதுதானே.

(புதியது கேட்கும தமிழ் நெறி வேலோய் )
் என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அருள் நிறைந்த புலவரு  நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள ்நிறைந்த பாடல் என்றும் புதியது...
முருகன்...என்ற பெயரில்... வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும்
குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ ் வேலும்... மயிலும்...
உனது தந்தை இறைவனுக்கோ ் வேலும் மயிலும். புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது திங்களுக்கும் ஞாயிறுக்கும
் கந்தன் மேனி புதியது

சேர்ந்தவர்க்கு  வழங்கும்  கந்தன் கருணை புதியது
அறிவில் அறியது...
அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது (முடிவு அது) முடிவில் முதல் அது
முதலில் முடிவது முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்தவர்க்கு ஆறுமுகம் புதியது

0 comments:

Post a Comment